×

மக்களுக்கான ஆளுநர் நான்: சட்ட விதிகளுக்குட்பட்டு செயல்படுவேன்: புதுச்சேரி விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி.!!!

புதுச்சேரி: புதுச்சேரி பாரதி வாழ்ந்த மண்; இங்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுராக இருந்த கிரண்பேட்டி நீக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டார். தொடர்ந்து, நாளை காலை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.

இதனையடுத்து, புதுச்சேரி வந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு விமான நிலையத்தில் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழிசை, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரி பாரதி வாழ்ந்த மண்; இங்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரி மக்களை நேசிக்கிறேன். சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்வேன். அதில், எந்த மாற்று கருத்தும் இல்லை.


தெலுங்கானா சென்று மொழி பயின்றுவிட்டேன். புதுச்சேரியில் மொழி பயில வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கான ஆளுநர் நான். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு ஆளுநராக வந்திருக்கிறேன். ஆளுநராக வந்திருக்கிறேன் என்றும் சிரித்தப்படி தெரிவித்தார். தொடர்ந்து, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.



Tags : Governor ,Puducherry Airport. ,Tamilisai Saundarajan , I am the Governor for the people: I will act according to the rules of law: Interview with Tamilisai Saundarajan at the Puducherry Airport !!!
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...