புதுச்சேரி: புதுச்சேரி பாரதி வாழ்ந்த மண்; இங்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுராக இருந்த கிரண்பேட்டி நீக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டார். தொடர்ந்து, நாளை காலை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.
Tags : Governor ,Puducherry Airport. ,Tamilisai Saundarajan , I am the Governor for the people: I will act according to the rules of law: Interview with Tamilisai Saundarajan at the Puducherry Airport !!!